வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

புதன், 26 மே, 2010

ராஜகிரி : இஸ்லாத்தின் பார்வையில் திருமணம்!

ராஜகிரி : இஸ்லாத்தின் பார்வையில் திருமணம்!
உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண், பெண்)களுக்கு திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன். (அல்குர்ஆன் 24:32)


இந்த வசனத்தில் இறைவன் ‘திருமணம் செய்து வையுங்கள்’ என்ற ஏவலை பயன்படுத்தியுள்ளதிலிருந்து தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பு பெற்றோர்களை சார்ந்தது என்பது விளங்குகிறது. குழந்தைகளை நல்லவிதமாக வளர்ப்பதும் அவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் துணைகளை அமைத்துக் கொடுப்பதும் நல்லப் பெற்றோர்களின் அடையாளமாகும். திருமண வயதை அடைந்து விட்டப் பிறகும் ஏழ்மையைக் காரணம் காட்டி திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டாம் எனற வழிகாட்டலும் இங்கு கிடைத்துள்ளது.

செவ்வாய், 25 மே, 2010

ராஜகிரி: கல்விக்கு உதவிடும் நல்லவர்களின் கவனத்திற்கு

ராஜகிரி: கல்விக்கு உதவிடும் நல்லவர்களின் கவனத்திற்கு


'எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.' (அல் குர்ஆன் : 13:11)

தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தில் கல்விக்கு உதவக்கூடிய நல்ல உள்ளங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இது முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள மார்க்கப் பிடிப்பையும் சமூகப் பற்றையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் ஒரு சில அறக்கட்டளைகள் மட்டுமே இந்த அறப்பணியைச் செய்து வந்தன ஆனால் இன்று தனிப்பட்ட முறையிலும் கூட தங்களால் இயன்ற அளவு படிக்கின்ற மாணவர்களின் நிலையை அறிந்து மனமுவந்து பலர் உதவி வருகின்றனர். இதன்மூலம் படித்து பட்டம் பெறும் முஸ்லிம் மாணவ மாணவியரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் பெறுகி வருகிறது என்பதில் மாற்றமில்லை.

சனி, 22 மே, 2010

ராஜகிரி தான்ஸ்ரீ உபைதுல்லா மெட்ரிக் பள்ளி 97 சதம் தேர்ச்சி

ராஜகிரி தான்ஸ்ரீ உபைதுல்லா மெட்ரிக் பள்ளி 97 சதம் தேர்ச்சி


இப் பள்ளியின் மாணவிகள்

ஏ. ஆமீனா நஸ்ரின் 1103,

எம். புஷ்ரா,1080, ,

கே. சலோபர் சிபாயா 1075

மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பெற்றனர்.


மேலும், பாட வாரியாக பள்ளி மாணவ, மாணவிகள்

ஹச். பாத்திமா தஸ்லீம்(தமிழ்,179),

எம். புஷ்ரா (ஆஙகிலம்,178),

ஏ. ஆமினா நஸ்ரின் (கணிதம் 191),

ஏ. ஆமினா நஸ்ரின் (இயற்பியல்,194),

மனோஜ் குமார் (இயற்பியல் 194),

ஆமினா நஸ்ரின் (வேதியியல்,191),

எம். புஷ்ரா (கணினி அறிவியல் 194),

ஹச்.பாத்திமா தஸ்லிம் (உயிரியல்,166),

எஸ். ஜொகரா நஸ்ரின் (பொருளியல் 185),

எஸ். ஜொகரா நஸ்ரின்(வணிகவியல்,200),

கே.எஸ். சலோபர் சிபாயா (வணிகவியல் 200),

கே.எஸ். சலோபர் சிபாயா (கணக்கு பதிவியல்,193)

உள்ளிட்டோர் பாட வாரியாக முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாணவ, மாணவிகளை பள்ளியின் செயலர் ஏ. சாகுல் ஹமீது, ஒருங்கிணைப்பாளர் எம். முகமது உமர், முதல்வர் எஸ். கஸ்தூரி உள்ளிட்டோர் பாராட்டினர்.

வியாழன், 20 மே, 2010

ராஜகிரி: அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும்!»

ராஜகிரி: அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும்!»
அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள்!


மூலம்: அஷ்ஷெய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்)

தமிழில்: முபாரக் மஸஊத் மதனி

அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள்:


முதல் அடிப்படை:

அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி வந்துள்ள அல்குர்அன் வசனங்களையும் நபிமொழிகளையும் அணுகும் முறை.

அல்குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் பொறுத்தவரை அவை தருகின்ற வெளிப்படையான கருத்திலேயே அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது. ஏனெனில் அல்குர்ஆன் அரபி மொழியிலேயே அருளப்பட்டுள்ளது. அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் அரபு மொழியையே பேசினார்கள்.


அல்குர்ஆனும் நபிமொழிகளும் தருகின்ற வெளிப்படையான கருத்துக்களை விட்டுவிட்டு அவற்றுக்கு வேறு அர்த்தங்கள் கற்பிப்பது அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுவதாக அமையும். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 18 மே, 2010

ராஜகிரி: உலகம் உங்களை மதிக்க வேண்டுமென்றால்

ராஜகிரி: உலகம் உங்களை மதிக்க வேண்டுமென்றால்

மாபெரும் சபையினில் நீ நடந்தால்… நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோமோ அப்படித்தான் உலகம் நம்மை அறிந்து கொள்கிறது. சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன பொருள்? நம்மீது பிறர் கொண்டிருக்கிற அபிப்பிராயம்தான் அவையெல்லாம்!



இந்த அபிப்பிராயங்களை அவர்களாக உருவாக்கிக் கொள்வதில்லை. நம்முடைய வார்த்தைகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் எல்லாம் சேர்ந்து நம்மீது சில அபிப்பிராயங்களைக் கட்டமைக்கிறது.


நாம் நல்ல மனநிலையில் இருப்பதைப் பார்ப்பவர்கள், இவர் ரொம்ப அன்பான மனுஷன் சார்” என்று முடிவெடுக்கிறார்கள். எதற்கோ, யார் மீதோ அளவு கடந்து கோபப்பட்டதைப் பார்ப்பவர்கள் அய்யோ! சரியான சிடுமூஞ்சி என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.

திங்கள், 17 மே, 2010

அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்!

அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்!


(நபியே! அவர்களிடம்;) "வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?" என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்; "(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்"; மேலும், கூறும்; "குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!" (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்; "அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்" என்று. (அல்குர்ஆன்:13:16)

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online