வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

செவ்வாய், 22 டிசம்பர், 2009

புதிதாக உருவாகிறது - நபி(ஸல்) பற்றிய சர்வதேசத் திரைப்படம்!

ராஜகிரி:புதிதாக உருவாகிறது - நபி(ஸல்) பற்றிய சர்வதேசத் திரைப்படம்!


இறைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்க்கையை உரிய ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டும் ஆவணமாக பெரும் பொருட்செலவில் புதியதோர் ஆங்கிலத் திரைப்படம் உருவாகிறது.


"இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்களின் பிறப்பிற்கு முன்பு துவங்கி, நபியவர்களின் மரணம் வரையிலான முழுமையான தொகுப்பான இத்திரைப்படம், நபியவர்கள் பற்றி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எண்ணங்களையும், காழ்ப்புணர்ச்சியுடன் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வரும் அனைத்து அவதூறுகளையும் களையும்!" என்கிறார் அஹ்மது அப்துல்லாஹ் அல் முஸ்தஃபா. இவர் கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் அல் நூர் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவராவார்.

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

ராஜகிரி : பொய் பேசாதீர் உண்மை பேசுக!

ராஜகிரி :பொய் பேசாதீர் உண்மை பேசுக!

அப்போது அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119.

பொய்

நாம் ஒரு நாளைக்கு எத்தனையோ தடவை பொய் சொல்கிறோம். அலுவகத்தில், நமது வீட்டில், நமது உறவினர்களிடத்தில், இன்னும் பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் எந்த வித கூச்சமோ, அல்லாஹ்வின் பயமோ இன்றி பொய் சொல்கிறோம்.

பொய் சொல்வது பெரிய குற்றமா என்று கூட நாம் நினைக்கிறோம். கைபேசிகள் (மொபைல் போன்) வந்த பிறகு இந்த பொய்யின் அளவு அதிகமாகிவிட்டது.

நான் ட்ராஃப்பிக்கில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு, அப்போது தான் வீட்டிலிருந்தே கிளம்புகிறார்கள். நம்மிடம் ஒருவர் கடன் கேட்கிறார், அல்லது அவர் கொடுத்த கடனை திரும்பி கேட்க கைபேசியில் அழைத்தால், நான் மீட்டிங்கில் இருந்தேன், அலுவகத்தில் வேளை அதிகம், ஆதலால் உங்களிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறுகிறார்கள்.

வியாழன், 17 டிசம்பர், 2009

ராஜகிரி :முஹர்ரம் புத்தாண்டு செய்தி-1431 (2009)

ராஜகிரி முஹர்ரம் புத்தாண்டு பிறந்துள்ளது. ஹிஜ்ரி 1430 கழிந்து 1431 துவங்கயுள்ளது. முஸ்லிம் உம்மத்தின் அவலங்களின் பட்டியல் நீண்டு சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் புத்தாண்டு வருகை தந்துள்ளது. 


ஆனால் இவை அனைத்தையும் விட கவலைக்குரிய விடயம் யாதெனில் முஹர்ரம் புதுவருடப் பிறப்பைப் பற்றியோ முஸ்லிம் உம்மத்தின் அவலங்கள் பற்றியோ எத்தகைய பிரக்ஞையுமின்றி எம் சமூகம் இருப்பதுதான்.

இஸ்லாமிய உம்மத்தின் மீது அதன் எதிரிகள் மேற்கொண்ட சிந்தனா ரீதியான கலாசாரப் படையெடுப்பின் விளைவினால்தான் அது (முஸ்லிம் உம்மத்) இத்தகைய உணர்ச்சியற்ற- உயிரோட்டமில்லாத நிலையை அடைந்துள்ளது. 



முஹர்ரம் புதுவருடத்தை விட ஜனவரி முதல் திகதியை அலட்டிக்கொள்ளும் அளவுக்கு, உம்மத்தின் அவலங்களைவிட, வீண்கேளிக்கைகள், விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகள் முதலானவை முன்னுரிமைப் பட்டியலில் முக்கியத்துவம் பெறும் அளவுக்கு முஸ்லிம்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

ராஜகிரி :உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்

ராஜகிரி :உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்

நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள்

http://docs.google.com/fileview?id=0BwT9AWp-M0H-ZjcxNzA1NjAtYzJjMS00OTdmLTgxZmItOTA3YWRjNDkzNjY0&hl=en

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online