வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

சனி, 28 ஆகஸ்ட், 2010

கையேந்திகளின் மாதமா ரமலான்? பகுதி - 2

சுயமரியாதை தனிமனித கவுரவத்தின் முதற்படி.

எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவர் தனது சுய கவுரவத்தை இழந்து விடக்கூடாது.

ஆனால் பிச்சை எடுப்பதை தொழிலாக செய்யும் சிலர் அவர்களுடைய மானம் மரியாதைகளைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் அடுத்தவர்களிடம் கையேந்துகிறார்கள்.இஸ்லாம் இவர்களுடைய இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறது.

இதே நேரம் அடுத்தவர்களுக்கு தர்மம் செய்பவர்களை தாராளமாக வழங்கும்படியும் சொல்கிறது.

நபி(ஸல்)அவர்கள் என்னிடம் நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்! எனக் கூறினார்கள். 'அப்தாவின் அறிவிப்பில்இ 'நீ (இவ்வளவுதான் என்று) வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான் எனக் கூறியதாக அஸ்மா(ரலி) அறிவித்தார்கள். 

நூல் புகாரி 1433.

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

கையேந்திகளின் மாதமா ரமலான் - பகுதி-1

அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்கி உணவு உண்டு சுபஹ் காலையில் இருந்து மாலை வரை இறைவனுக்காக உண்ணாமலும் பருகாமலும் இருந்து இறையச்சத்தை அதிகப் படுத்த வேண்டிய மாதம் இந்த ரமழான் மாதம். 

முஸ்லீம்கள் என்று சொல்லக் கூடிய சிலர் இந்த மாதத்தை கையேந்திகளின் மாதமாக மாற்றியிருப்பதுதான் மிகவும் கவலைக்குறிய விஷயமாகும். 

மகளுக்கு திருமணம் வரதட்சனை (சீதனம்)கொடுக்க வேண்டும் 

மகனுக்கு நோய் 

தந்தைக்கு முடியவில்லை 

தாய் படுத்த படுக்கையில் உள்ளார் 

சகோதரனுக்கு பேச முடியாது 

சகோதரிக்கு நடக்க முடியாது 

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதினாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியை இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு

மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதினாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியை இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு
                                                மக்கா
                       
                               mms://38.96.148.74/Quran2
                                       
                                             மதினா
                       
                               mms://38.96.148.74/Sunna2



சனி, 21 ஆகஸ்ட், 2010

இராஜகிரி சமூக நலப் பேரவை இஃப்தார் நிகழ்ச்சி


இராஜகிரி வாழ் அமீரக நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

இராஜகிரி சமூக நலப்பேரவை இஃப்தார் நிகழ்ச்சி நேற்று (20.08.2010, வெள்ளிக் கிழமை) அன்று துபை அல் கிஸஸில் இருக்கும் சகோதரர் யூசுஃப் அவர்களின் இல்லத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. சென்ற வருடம் போல் இந்த வருடமும் நம்மூர் மக்கள் மட்டுமல்லாமல் பண்டாரவாடை, கடலூர், அய்யம்பேட்டை சகோதரர்களும் கலந்து கொண்டது நம் அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது.

இது போன்ற நிகழ்ச்சிகளால் குடும்பத்தை விட்டு பிரிந்து இயந்திர வாழ்க்கை வாழக்கூடிய நம் சமுதாய சொந்தங்களுக்கு ஒரு புத்துனர்வு ஏற்படும் என்பதும், பார்க்க முடியாத தூரத்தில் இருக்கும் சொந்தங்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பாக அமைகிறது என்பதும் முற்றிலும் உண்மை.

நோன்பு இஃப்தார் ஏற்பாடுகளையும், வாகன ஏற்பாடுகளையும் இராஜகிரி சமூக நலப்பேரவை சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே




இராஜகிரி சமூக நலப்பேரவை

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

இஃப்தார் நிகழ்ச்சி ராஜகிரி சமூக நலப்பேரவை

இஃப்தார் நிகழ்ச்சி ராஜகிரி சமூக நலப்பேரவை


அஸ்ஸலாமு அலைக்கும்.

ரமலான் முபாரக்.

இன்ஷா அல்லாஹ் வருகிற 20.08.2010, வெள்ளிக் கிழமை அன்று இராஜகிரி சமூக நலப் பேரவை சார்பாக துபை அல் கிஸஸில் இருக்கும் சகோதரர் யூசுஃப் அவர்களின் அறையில் (ரூமில்) இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இராஜகிரி வாழ் அமீரக நண்பர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு ராஜகிரி சமூக நலப்பேரவை சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

வாகன ஏற்பாடு:

சரியாக 20.08.2010, வெள்ளிக் கிழமை மாலை 5 மணியளவில் கும்பகோணத்தார் அன்சாரி பாய் சாவி கடையிலிருந்து புறப்படும்.

இங்கணம்

இராஜகிரி சமூக நலப் பேரவை

துபை, ஐக்கிய அரபு அமீரகம்

ரமலான் சிந்தனைகள்

ரமலான் சிந்தனைகள்

இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:


வரவுக்கு மீறி செலவு செய்து, ஆடம்பரமாய் வாழும் நிலையால் பலரும் அவதிப்படுகின்றனர். ஒருமுறை, நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர் ஒன்று கூடி, ""இறைத்தூதரே! தாங்கள் எங்களுக்குச் செலவுக்காக வழங்கும் பொருள் போதாது. இனிமேல், செலவுத் தொகையை அதிகமாக்கித் தர வேண்டும்,'' என்றனர்.

மனைவியரிடம் அண்ணலார் பேசவில்லை. வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள், பள்ளிவாசலிலேயே 28 நாட்கள் தங்கிவிட்டார்கள். ஒருநாள், இறைவனின் தூதுவரான ஜிப்ரீல் (அலை) அவர்கள், ஒரு வேத வசனத்துடன் இறங்கி வந்தார்கள்.""நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கிக் கூறுங்கள்.

நீங்களெல்லாம் இந்த உலக வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவோராயின், வாருங்கள்...உங்களின் வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துக் கொள்கிறேன். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் தூதரையும் (தன்னையும்) மறுமையின் வீட்டையும் விரும்புவோராயின்,

 நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள நன்மையை நாடுவோர்க்கு மகத்தான கூலியைத் தயாராக்கி வைத்துள்ளான்,'' என்பதே அந்த வசனம். "அதாவது, ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டு, நான் தருவதற்கு மேல் செலவழிக்க நினைப்பவர்கள் என்னை விட்டு பிரிந்து கொள்ளலாம்' என்ற ரீதியில் இந்த வசனம் அமைந்தது.

நாயகம்(ஸல்) அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள். தன் மனைவி ஆயிஷா அம்மையாரை அழைத்து, இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அந்த அம்மையார், அதை மற்றவர்களிடம் சொல்ல, அல்லாஹ் மூலம் விடுக்கப்பட்ட அந்த எச்சரிக்கையைக் கேட்டு அவர்கள் திடுக்கிட்டனர்.

எல்லோரும், தங்கள் செய்கைக்காக நபிகளாரிடம் மன்னிப்பு கேட்டனர். அடுத்தவர்கள் அணியும் நகை, ஆடை, உபயோகிக்கும் பொருட்களைப் பார்த்துவிட்டு, தனக்கும் அதுபோல் வேண்டும் என எண்ணாமல் இருப்பதைக் கொண்டு வாழ வேண்டும் என்பதை இன்றைய ரம்ஜான் சிந்தனையாகக் கொள்வோம்.

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

ரமழானும் நடைமுறை வாழ்வும் - நேர்காணல்

தலைசிறந்த இஸ்லாமிய அறிஞரும் எழுத்தாளரும் நாவன்மை மிக்க பேச்சாளருமாகிய ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் 'ரமழானும் நடைமுறை வாழ்வும்' என்ற தலைப்பில் அல்ஹஸனாத்துக்கு வழங்கிய நேர்காணலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.


அல்ஹஸனாத்: பல்லின சமூகத்தின் மத்தியில் வாழ்கின்ற சிறுபான்மையினர் என்ற வகையில் எமது ரமழான் கால நடவடிக்கைகளை, ரமழான் மாதத்தை பிற சமூகத்தினர் எவ்வாறு நோக்குகின்றார்கள்?


அஷ்ஷெய்க் அகார்: இந்த நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம் சமூகத்தின் நடவடிக்கைகளை அடுத்த சமுதாயங்கள் தூரத்தில் நின்று அவதானித்து வருகின்றன.

எமது ஒவ்வொரு செயற்பாடும் அவர்களது பார்வையில் நேரானதாகவோ எதிர்மறையாகவோ நோக்கப்படுவதையும் எமது ஒவ்வொரு செயற்பாடு பற்றியும் அவர்களிடம் ஒரு கருத்து இருப்பதையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. எமது பள்ளிவாசல்கள், வணக்க முறைகள், தொழுகைகள், சகோதரத்துவ உறவுகள், பழக்கங்கள், திருமண வைபவங்கள், ஜனாஸா நல்லடக்கம், பெண்களின் உடை, நடை, பாவனைகளை அவதானித்து முஸ்லிம்கள் பற்றி ஒரு கருத்தை எடுத்துக் கொள்கின்றார்கள்.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

அருள்வளம் மிக்க மாதம் ரமளான்

அருள்வளம் மிக்க மாதம் ரமளான்


நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1904

ரமளான் மாதத்தை பெருமானார்(ஸல்) அவர்கள் அருள்வளம் மிக்க மாதம் என்று வர்ணித்துக் கூறினார்கள்.

ஒருவருக்கு இவ்வுலகில் ஏராளமான பொருட் செல்வங்கள் கிடைக்கப் பெறுவது அருள்வளம் அல்ல, மாறாக மறுமையின் வெற்றிக்கான வாய்ப்புகள் கிடைப்பதே அருள்வளமாகும். அதற்கான வாய்ப்புகள் ஏராளமாக கிடைப்பது இந்த ரமளான் மாதத்தில் தான்.

மனிதர்கள் செய்யும் நற்செயலுக்கான கூலி பத்திலிருந்து எழுநூறு மடங்காக பல்கிப் பெருகுகின்றன நோன்பைத் தவிற, நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுக்கிறேன், எனது அடியான் எனக்காக தனது உணவையும், இச்சiயையும் விட்டு விடுகிறான், என்று இறைவன் கூறுவதாக பெருமானார்(ஸல்)அவர்கள்கூறுகின்றார்கள். புகாரி, முஸ்லீம்.

நோன்பு எனக்குரியது என்றும், எனக்காக என் அடியான் உணவையும், ஆசைகளையும் விட்டு விடுவதால் அவனுக்கு நானே கூலி வழங்குகிறேன் என்று அல்லாஹ் கூறுவதால்,

சனி, 14 ஆகஸ்ட், 2010

ஆரோக்கிய நோன்பு

ஆரோக்கிய நோன்பு

அருள்மறை அருளப்பட்ட புனித ரமளான் மாதம், நமது உடலியல் தேவைகளுக்கு ஒரு சுயசோதனைப் பருவமாகும். பதினொரு மாதங்கள் பகற்பொழுதில் உணவு உண்ண அனுமதித்த இறைவன், இந்த ஒரு மாதத்தில் மட்டும் பகற்பொழுதில் உண்ணாமல், பருகாமல், உடல் இச்சைகளுக்கு இடம் கொடாமல் இருக்கச் சொல்கிறான்.

அவ்வாறு கட்டுப்பாட்டுடன் இருக்கும் நாம் சூரியன் மறைந்தபின் 'தடை நீங்கியது' என்று ஒரே மூச்சில் உணவுகளை கபளீகரம் செய்ய முனையாமல் ஆரோக்கியமான முறையில் உடல்நலம் கேடாகாத வகையில் எளிய செய்முறைகள் மூலம் ரமளானை ஆரோக்கியமாகக் களிக்கலாம்.



நாள்முழுவதும் படைத்தவன் இட்ட கட்டளையை மதித்து உண்ணல், பருகல் போன்ற உடலியல் தேவைகளில் இருந்து விலகி இருந்த நாம் சரியான முறையில் நோன்பை முடித்துக் கொள்ளாவிட்டால், நோன்பு மூலம் நாம் கற்க வேண்டிய பயிற்சியைப் பெறவில்லை என்றே பொருளாகும்.

புதன், 11 ஆகஸ்ட், 2010

புது இரத்தம் பாய்ச்சும் புனித ரமளான்

புது இரத்தம் பாய்ச்சும் புனித ரமளான்

ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ 1899, முஸ்லிம் 1957


இந்த ஹதீஸ் உண்மையில் ஓர் உயிரோட்டமான ஹதீஸாகும்.இது அல்லாஹ்வுடைய தூதரின் சொல் தான் என்று நமது நம்பிக்கையைப் பலப்படுத்தும் ஹதீஸாகும்.


பள்ளிவாசல் தொடர்பில் கொஞ்சம் அலட்சியமாக இருக்கின்ற பழைய முகங்கள்! பள்ளியுடன் தொடர்பில்லாத புதிய முகங்கள்! அத்தனை பேர்களையும் இந்த ரமளான்,பள்ளியில் கொண்டு வந்து சேர்த்து விடுகின்றது.


அராஜக ஷைத்தானின் ஆதிக்கம் ஒரு கட்டுக்குள் வருவதால் தானே கட்டுக்கு அடங்காத கூட்டம் பள்ளிகளில் கூடி களை கட்டுகின்றது; பள்ளி நிரம்பி வழிகின்றது. இந்த மிகப் பெரிய மாற்றத்தை ரமளான் மக்களிடத்தில் கொண்டு வந்து விடுகின்றது.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

ரமலான் மலர். ..........மவ்லவி இப்ராஹீம் மதனி, ஜித்தா

Ramadan_Malar

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

ரமலான் பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....


من صام رمضان اماناً و احتِساباً غُفِر له ما تقدًَم من ذنبه

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி-முஸ்லீம்

பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்.

மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன்,

ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.

மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் ? என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30

நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான்.

அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.

ஆதம்(அலை) அவர்களை அழைத்து வானவர்களின் முன்பாக நிருத்தி அவற்றின் பெயர்களை கேட்டான் வானவர்கள் கூற முடியாத பதிலை ஆதம் (அலை) அவர்கள் கூறினார்கள். திருக்குர்ஆன்.2:33

சனி, 7 ஆகஸ்ட், 2010

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!

உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.



நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது.

“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.” (2:83)

மேற்படி வசனம், “நோன்பு” என்பது பக்குவத்தை வளர்க்கும் பயிற்சி என்கின்றது. இன்று உலகை உலுக்கி வரும் அநேக பிரச்சினைகளுக்கு நோன்பு ஒரு தீர்வாக இருப்பதை நுணுக்கமாக ஆராய்ந்தால் அறிய முடியும்.

புதன், 4 ஆகஸ்ட், 2010

ராஜகிரி :3000 வருட ஹிஜ்ரி நாட்காட்டி

ராஜகிரி: 3000 வருட ஹிஜ்ரி நாட்காட்டி (எக்ஸெல் மென்பொருளில் இணைத்து செயல்படுத்த

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


அன்பான சகோதர சகோதரிகளுக்கு,

3000 வருடத்திற்கான ஹஜ்ரி நாட்காட்டி எக்ஸெல் பக்கத்தில் இணைத்து செயல்படுத்துவதற்கு வசதியாக இம்மென்பொருள் உறுவாக்கப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 1431 ரமளான் அன்பளிப்பாக இதை மனித சமுதாயத்திற்கு வழங்குகிறோம்.

இதை எல்லா மொழி பேசும் மக்களும் உபயோப்படுத்தும் வகையில் நீங்கள் உலகத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்.

இதில் குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்கவும்.

நமது இணையத்தளத்தில் எக்ஸெல் பக்கத்தில் இணைக்கும் முறைகளுடன்

http://lunarcalendar.in/?p=1086

நேரடி தளம்


http://coachexcel.webs.com/downloads.htm

இப்படிக்கு


நிர்வாகி


இந்திய ஹிஜ்ரி கமிட்டி







திங்கள், 2 ஆகஸ்ட், 2010

ராஜகிரி: ரமழானை வரவேற்போம்

ராஜகிரி: ரமழானை வரவேற்போம்


புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.

ரமழான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.

‘இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்தோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்’ (அல்பகரா 2:183).

ரமழான் மாதத்திற்குரிய பிறையை பார்ப்பதன் மூலமோ பிறை தென்படாத பொழுது ஷஃபானை முப்பதாக கணக்கிடுவதன் மூலமோ நோன்பு நோற்பது கடமையாகும். ‘பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்பட வில்லையானால் ஷஃபானை முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online