வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ஞாயிறு, 28 மார்ச், 2010

ராஜகிரி: குடும்பத்தில் நிம்மதியை தேடி அலையும் என் சகோதர, சகோதரிகளே!

ராஜகிரி :  குடும்பத்தில் நிம்மதியை தேடி அலையும் என் சகோதர, சகோதரிகளே!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


குடும்பத்தில் நிம்மதியை தேடி அலையும் என் சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோதரர்களே! குடும்பம் அல்லாஹ்வுடைய மிகப்பெரும் அருட் கொடையாக உள்ளது ஆனால் நாம்தான் அதை மறந்து விடுகிறோம். நினைத்துப்பாருங்கள் குடும்பம் இல்லையெனில் நாம் அநாதைகள்தானே! நீங்கள் சொந்த நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இருக்கலாம் எங்கிருந்தாலும் தொலைபேசி, கடிதம் வாயிலாக உங்களிடம் மிக நெருக்கமாக, ஆசை ஆசையாக பேசக்கூடிய நபர்கள் யார்? உங்கள் குடும்ப உறுப்பினர்கள்தானே! அப்படிப்பட்ட குடும்பத்தை நாம் எவ்வாறு பேணுவது? பெற்ற தாய் மற்றும் உடன் வாழும் மனைவி மக்கள் ஆகியோருக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுதான் என்ன? அலசிப்பார்ப்போம்!


எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52

வியாழன், 25 மார்ச், 2010

ராஜகிரி: ஆபாச சினிமா துறையும், சீரழிக்கும் சீரியல் துறையும்.

ராஜகிரி: ஆபாச சினிமா துறையும், சீரழிக்கும் சீரியல் துறையும்.

வாழ்நாளை எப்படிக் கழித்தான்? வாலிபத்தை எதில் ஈடுபடுத்தினான்? செல்வத்தை எப்படி சம்பாதித்து, எவ்வழியில் செலவு செய்தான்? கற்றவைகளில் எதைச் செயல்படுத்தினான்? என ஐந்து விஷயங்கள் பற்றி விசாரிக்கப்படாத வரை மறுமை நாளில் எந்த மனிதனின் பாதமும் தன் இறைவனிடமிருந்து நகர முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத்(ரலி) நூல்: திர்மிதி (2531)


ஒவ்வொரு விஞ்ஞானத்தின் முன்னேற்றத்திலும் எவ்வளவு நன்மை இருந்தாலும் அதைவிடத் தீமைகளும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. நாம் பயன்படுத்தும் முறையைப் பொருத்துதான் அது நன்மையானதா? அல்லது தீமையானதா? என அறிய முடிகிறது. இதில் மின்னணு ஊடகங்கள் (Electronic Media) என்று சொல்லப்படும். வானொலி (Radio), ஒலிப்பதிவு (Recording), திரைப்படம் (Film), தொலைக்காட்சி (Television), போன்றவை குறிப்பிடத்தக்கது. கல்வி, தொழில் நுட்பம், தகவல் தொடர்பு, ஆன்மீகம் போன்ற நன்மைகளை இதன் மூலம் நாம் பெற முடியும். ஆனால் இந்த நன்மையான காரியங்களில் இத்துறை பயன்படுவதைவிட ஆபாசம், விரசம், கொலை, கொள்ளை போன்ற தீய செயல்களில்தான் இத்துறை முனைப்புக் காட்டுகிறது. குறிப்பாக திரைப்படம் மற்றும் தொலைக் காட்சிகளில் நாம் பெறும் நன்மையை விட தீமைகள்தான் ஏராளம். இதன் பாதிப்புக்கள் குக்கிராமம் முதல் முன்னேறிவிட்ட பெரு நகரங்கள் வரை வியாபித்திருக்கிறது.

செவ்வாய், 2 மார்ச், 2010

ராஜகிரி சுயபரிசோதனை!

 ராஜகிரி சுயபரிசோதனை!
       மரண ஓலம் உலகத்தை அப்பிக்கொண்டிருக்கிறது! எங்கு பார்த்தாலும் மனித இரத்தம் புவியை நனைத்துக் கொண்டிருக்கும் சிவப்புக் காட்சிகள்! குறிப்பாக முஸ்லிம்களின் விலைமதிக்க முடியாத உயிர், செல்லாக் காசுகளாகிவிட்ட கொடூர காலக்கட்டம்! எந்த நேரத்தில் நம் உயிர் பிரியும் என்பது யாருக்கும் தெரியாது! எங்கு தான் இந்த உயிர் பறிக்கப்படும் என்பதும் நமக்குத் தெரியாது!

எனவே அடிக்கடி நம்மை நாமே சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த கால நம் வாழ்க்கையை கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்து நம் எதிர்காலத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். கடந்த காலம் குறித்த பின்னோக்கும் தன்மையும், எதிர்காலம் குறித்த திட்டமிடலும் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை.

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online